திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் | மறைவு: 12.03.2015

திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம்
மாப்பாணவூரி காரைநகர்
(சிட்னி, அவுஸ்திரேலியா)

மறைவு: 12.03.2015
காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் தற்போது சிட்னி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவருமாகிய திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 12.03.2015 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற கந்தையா கனகரத்தினத்தின் அன்பு மனைவியும், சிவபாதசுந்தரம் (கனடா), அருள்ஞானசுந்தரம், அருந்ததிதேவி, செல்வமணி, ஈஸ்வரபாதம் ஆகியோரின் பாசமிகு தாயாரும், விஜயலட்சுமி, தனேஸ்வரி, ரஞ்சிற்குமார், சிறீகாந்தா, சுபோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரணவன், காயத்திரி, அபிராமி, ராம்பிரகாஸ், கஜன் ஆகியேரின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்ற திருமதி அமராவதி
சிவராமன், நாகரட்ணம்(இலண்டன்), காலஞ்சென்ற அரசரத்தினம், திருமதி இராசலோகினி தம்பிஐயா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக 14.03.2015 சனிக்கிழமை Liberty Funerals, 101 South Street, Granville, NSW 2142 என்ற இடத்தில் மாலை 4.00 மணி முதல் 7.00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் 16.03.2015 திங்கள்கிழமை East Chapel, Rookwood சேமக்காலையில் மதியம் 12.15 முதல் 3.00 மணிவரை நடைபெற்று தகனம்
செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொலைபேசி: அவுஸ்திரேலியா – 614 6962 9650

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

சிவசிறீ ச. ப. அறுமுகக் குருக்கள் | ஆண்டவன் மடியில் 27.Feb.2015

முருகேசு சிவஞானரத்தினம் | மறைவு: 02.04.2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *