முருகேசு சிவஞானரத்தினம்
(ஓய்வு பெற்ற இரசாயனவியல் ஆசிரியர் – யாழ் இந்துக்கல்லூரி)
தபால்கந்தோரடி, காரைநகர்
(யாழ்ப்பாணம்)
மறைவு: 02.04.2015
காரைநகர் தபாற்கந்தோடியைப் பிறப்பிடமாகவும் 112 பிறவுன் வீதி, நீராவியடி, யாழ்ப்பானத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவஞானரத்தினம் 02.04.2015
வியாழக்கிழமை இறைபதம் எய்தினார்.
ஆன்னார் காலஞ்சென்றவர்களான ஊ.மு.முருகேசு-சின்னக்குட்டி தம்பதிகளின் மகனும் காலஞ் சென்றவர்களான வினாசித்தம்பி, தையல்முத்து தம்பதியரின் மருமகனும் வள்ளியம்மையின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான அருள்ரத்தினம்,
குணபாக்கியம், கனகமணி ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மு.ஏ.பொன்னம்பலம், செல்லத்துரை, கணபதிப்பிள்ளை, கந்தையா, தங்கம்மா, இராசம்மா ஆகியோரின்மைத்துனரும், நிரஞ்சினி(கனடா),
ஆனந்தரத்தினம்(இலங்கை வங்கி), இன்பரத்தினம் (எந்திரி கடற்தொழில் நீரியல்வள அமைச்சு) ஆகியோரின் அருமைத் தந்தையும், தயாபரன் (கனடா) கேதீஸ்வரி (ஆசிரியை- இந்தமகளிர்கல்லூரி) Dr.ஜசிந்தா(போதனா வைத்தியசாலை பேராதனை) ஆகியோரின் மாமனாரும்,
பிரவீன், பிரவீனா, விதுசன், தர்மிதா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, மற்றும் பொன்மனி, காலஞ்சென்ற ஆறுமுகம், மற்றும் சரஸ்வதி,
காலஞ்சென்ற சபாநடேசன், பராசத்தி ஆகியோரின் சம்மந்தியுமாவார். ஆன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.04.2014 திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்துமயானத்தில் தகனம்
செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்
குடும்பத்தினர்
112 பிறவுன் வீதி
நீராவியடி,
யாழ்ப்பாணம்.

