ஒப்பிலாமணி வேலுப்பிள்ளை
நீலிப்பந்தனை, காரைநகர்
மறைவு: 16.06.2013
காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும், கனடா மற்றும் கோவளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஒப்பிலாமணி வேலுப்பிள்ளை அவர்கள் 16.06.2013
அன்று காரைநகரில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஒப்பிலாமணி வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், பொன்னுத்துரை மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும், பாலசரஸ்வதியின் அன்பு கணவரும் திருமதி புவனேஸ்வரி கணபதிப்பிள்ளை, பாலசிங்கம், காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
மகேஸ்வரன், ஜெகதீஸ்வரன்(கனடா), சோதீஸ்வரன் ஆகியோரின் அன்பு தந்தையும், மகாலட்சுமி, கிருஸ்ணவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாத்வீகன், சானுஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் காரைநகர் கோவளம் இல்லத்தில் 20.06.2013 வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல்
தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: குடும்பத்தினர்
கோவளம், காரைநகர்

