அமரர் கனகலிங்கம் சுதர்சன் | ஆண்டவன் அடியில்: 17.09.2012 | ஆறாம் மாத நினைவஞ்சலி

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்;, 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்டவரும், கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றியவருமான

அமரர் கனகலிங்கம் சுதர்சன்


அன்னை மடியில்: 24.03.1986
ஆண்டவன்அடியில்: 17.09.2012 திதி – துதியை: 13.03.2013

சுந்தரா எங்கள் சுதர்சா எங்கே உன் முகம்………
அன்பினில் விளைந்தவன் நீயே
ஆருயிராய் நின்றவன் நீயே
எங்களில் கலந்தவன் நீயே
எங்களை ஆள்பவனும் நீயே
எங்கள் வலி துடைக்கும் மருத்துவனும் நீயே
சுந்தரா எங்கள் சுதர்சா எங்கே உன் முகம்……….

யாருமே எதிர் பாராத ஒரு நோய் இருளாய் வந்து
உன்னை அழைத்துச் சென்றதே ஐயா!
உன் நினைவுகளை ஏந்தி தவமிருக்கும் இவ் ஆறாம் மாத நினைவிலே
உன் பிறந்தநாள் நினைவு வந்து எம் நெஞ்சத்தைப் பிளக்குதே ஐயா!
சுந்தரா எங்கள் சுதர்சா எங்கே உன் முகம்………..

என்றாலும் உன் பெயரை உச்சரித்தபடி எங்கள் முற்றத்திற்கு
வருபவர்கள் யாரும் எம்மைக் கைவிடவில்லை
உன்னை நினைத்து வாழும் நெஞ்சங்களில்
அன்பின் ஈரமும் நினைவின் சாரமும் குறையவே இல்லை
சுந்தரா எங்கள் சுதர்சா எங்கே உன் முகம்…………..
உன் நினைவுகளால் ஒளி கொண்டோம்
உன் நம்பிகைக்கு ஒளி கிடைத்தது
உன் நினைவுகளுக்கு மலர் தந்தோம்

உம்மை என்றும் மறவாது போற்றுவோம்.
ஓம் சாந்தி!!! சாந்தி!!! சாந்தி!!!
குடும்பத்தினர்

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

சுப்பிரமணியம் சோமசுந்தரம் | இறைபதம் 12.09.2012

கனகலிங்கம் சுதர்சன் |இயற்கை 17.09.2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *