திருமதி ஐயம்பிள்ளை நாகரத்தினம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
புதுறோட், காரைநகர் (கொழும்பு)
காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நாகரத்தினம் 13.05.2012 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார். அமரர் ஐயம்பிள்ளையின் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அன்பு மனைவியும், பொன்மலர்,
உமாதேவி, விமலாதேவி, அமரர் வெற்றிநாதன் (பொறியியலாளர்), ஜேயமணிதேவி, சந்திராதேவி
ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்;சென்ற நல்லதம்பி மங்கையற்கரசி, கந்தையா சரவணமுத்து ஆகியோரின் சகோதரியும் அமரர் சண்முகராஜா, நவநீதகிருஷ்ணன், நவரத்தினம், அமரர் ஜெயராஜா(ஜெயா புக்சென்ரர்) ஆகியோரின் அன்பு மாமியும், சகிலா, அழகீசன், தர்சனா,
ரகுவரன், சரமிளா ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார். அன்னாரின் பூதவுடல் 14.05.2012 திங்கட்கிழமை மு.பகல் 11 மணிக்கு 4, விவேகானந்த அவனியூ கொழும்பு – 6 இல்
அமைந்துள்ள இல்லத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொலைபேசி இலக்கம்: 236 1685 (கொழும்பு)

