திரு.சோமசுந்தரம் விவேகானந்தராசா
(மின்தொழில்நுட்பவியலாளர்)
களபூமி, காரைநகர்
(கொழும்பு)
தோற்றம்: 05.05.1969 மறைவு: 17.04.2015
காரைநகர், களபூமியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சோமசுந்தரம் விவேகானந்தராசா(மின் தொழில்நுட்பவியலாளர், கொழும்பு) அவர்கள் வெள்ளிக்கிழமை (17.04.2015) அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி சோமசுந்தரம் (வர்த்தகர், கொட்டாஞ்சேனை), இராசம்மா
தம்பதிகளின் அன்பு மகனும், நேவிச்சந்தி பலகாட்டைச் சேர்ந்த முருகேசு வேலுப்பிள்ளை(இளைப்பாறிய பிரதம கணக்காளர், கச்சேரி, யாழ்ப்பாணம்) காலஞ்சென்ற
கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாதேவியின்(இந்து கலாசார அமைச்சு, கொழும்பு) ஆருயிர்க் கணவரும், ஆதித்தியா, விசாகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், துரைரத்தினராசாவின் (துரை) பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற ஜெயதேவி(ஆசிரியை,
கொழும்பு), அம்பிகாதேவி(வருமானவரித் திணைக்களம், அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற ஆனந்தவேல்( மின் தொழில் நுட்பவியலாளர், கொழும்பு), கமலினி ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற பரஞ்சோதியின் சகலரும், ரூபன், வியாசர், ஆதிரன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை(19.04.2015) அன்று காலை 8 மணிக்குப் பார்வைக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள்;; நடைபெற்று, பின்னர் கல்கிசை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்
கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
கலாதேவி (மனைவி) கொழும்பு 011-94-71440-2305
துரைரத்தினராசா (சகோதரன்) கொழும்பு 011-94-11238-9344
அம்பிகாதேவி (மைத்துனி) அவுஸ்ரேலியா 011-61-296339106
தகவல்:
திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம் (மாமா) கனடா (416)386-0433

