திருமதி பூமணி கனகசுந்தரம் | மறைவு: 08.09.2014

திருமதி பூமணி கனகசுந்தரம்
(மானிப்பாய்)
வலந்தலை காரைநகர்
(கொழும்பு)
மறைவு: 08.09.2014

மானிப்பாயை பிறப்பிடமாகவும் காரைநகர் வலந்தலையை சேர்ந்த Dr.கனகசுந்தரத்தின் அன்பு மனைவியும் இல 62ஃ5 மயூரா பிளேஸ் கொழும்பு –
6 ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி பூமணி கனகசுந்தரம் அவர்கள் 08.09.2014 அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி விசுவலிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், வினோதினி, விநாயபவன், வீரபவன், கோணேஸ்வரபவன்
ஆகியோரின் அன்புத் தாயாரும், கதிரவேலுப்பிள்ளை, சிவதீஸ்வரி, றேணுகாதேவி, வத்சலா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, அன்னலட்சுமி, இரத்தினசபாபதி, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11.09.2014 வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: திருமதி கதிரவேற்பிள்ளை(மகள்)
தொலைபேசி: 011 2500427

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

கணபதிப்பிள்ளை மகேசன் | மறைவு: 05.08.2014 |திதி: 04.09.2014

அன்னமுத்து செல்லத்துரை விண்ணில் 24.09.2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *