சுதுமலை, காரைநகர், ஆனைக்கோட்டை
தோற்றம்: 06.01.1937மறைவு: 01.09.2020

மதவடி வீதி சுதுமலை வடக்கை பிறப்பிடமாகவும் பொன்னையா லேன் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பொன்னையா திரவியநாதன் 01.09.2020 செவ்வாய்கிழமை தனது 84வது வயதில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொற்குணதேவியின் அருமை சகோதரரும் காலஞ்சென்ற இலங்காதேவி(ஆனைக்கோட்டை), காலஞ்சென்ற ஞானாம்பிகை(காரைநகர்), மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் நேசமிகு கணவரும்,
திரவியகுமாரி(பிறேமா- டென்மார்க்), சித்திரகுமாரி(பிறீசா – டென்மார்க்), உருத்திரதீசன்(நேதாஜி-டென்மார்க்), விக்கிரமதீசன்(பாபுஜி-கனடா), ஞானேந்திரகுமாரி(விஜி-கனடா), பிறேமளகுமாரி(ராஜி-அவுஸ்திரேலியா), பிரமேந்திரதீசன்(ராஜாஜி. தம்பி- கனடா), ஜெயதீசன்(மாவீரர்), கோமளதீசன்(சுபாஜி- ஆனைக்கோட்டை), திவ்வியதீசன்(பாபாஜி-சுவிஸ்), சூரியதீசன்(நேருஜி-டென்மார்க்), விமலதீசன்(வினோபாஜி-ஆனைக்கோட்டை), யதுகுலதீசன்(காந்திஜி- டென்மார்க்), பிரியதர்சினி(தீபா-ஆனைக்கோட்டை) ஆகியோரின் தகப்பனாரும்,
காலஞ்சென்ற வ.நடராசா அவர்களின் மைத்துனரும், காலஞ்சென்ற இதயசூரியன் மற்றும் வாகீசன், வாசுதன் ஆகியோரின் தாய் மாமனாரும்,
இளங்கோவன், பாரதிதாசன், கௌரி, மிலானி, மனோகாந்தன், பிரபாகரன், அபிராமி, சரஸ்வதி, துர்க்கா, டிசாந்தி ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரது இறுதிக்கிரியைகள் பொன்னையா லேன், ஆனைக்கோட்டையில் உள்ள அன்னாரது இல்லத்தில் 03.09.2020 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்று யாழ் கோம்பையன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தொடர்புகளுக்கு: விமலதீசன்(ஆனைக்கோட்டை) – 077 301 9340 தகவல்: பிரமேந்திரதீசன்(கனடா) 416 821 8390
