சதாசிவம் சந்திரேஸ்வரன் | ஆண்டவன் அடியில் : 16.01.2012

சதாசிவம் சந்திரேஸ்வரன்
எண்ணாங்கப்பிட்டி சல்லை, காரைநகர் (வந்தாறுமூலை)

அன்னை மடியில் : 1971.02.22
ஆண்டவன் அடியில் : 2012.01.16
காரைநகர் எண்ணாங்கப்பிட்டி சல்லையை பிறப்பிடமாகவும், வந்தாறுமூலையை வசிப்பிடமாகவும்
கொண்ட சங்கர் அரிசி ஆலையின் உரிமையாளருமான சதாசிவம் சந்திரேஸ்வரன் 16.01.2012 அன்று அகால மரணமானார்.

அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் பரமேஸ்வரியின் அன்பு மகனும் வசந்தாவின் அன்புக்கணவரும், காலஞ் சென்றவர்களான கனகசபாபதி, சிவபாக்கியம் அவர்களின் மருமகனும், மல்லிகா, தவமலர், சண்முகராசா (காரை உ.அ.அ.பணிமனை) ஆகியோரின் அன்பு சகோதரனும், தியாகராஜா, சிவலிங்ககுமார், புஸ்பலதா, வரதராஜன், செல்வராஜா, காலஞ்சென்ற சிவகுமார், மற்றும் விஜிராணி(கனடா), சரோஜாதேவி, கிருஷ்ணரூபி ஆகியோரின் மைத்துணரும், ரமேஷ்(சுவிஸ்), சுஜித்தா, விஜித்தா, சிவராஜா, கஜன், சுசிலா, பகிதரன், பிரியங்கா
அவர்களின் அன்பு மாமனாரும், அனோஜா, லங்கஜன் ஆகியோரின் பெரிய தந்தையும், சிவகுமார், விக்கினேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வந்தாறுமூலை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

திருமதி கந்தையாபிள்ளை சிவமலர் | உதிர்வு: 04.12.2011

வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம் | மறைவு 27.01.2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *