திருமதி நல்லையா விஜயலட்சுமி(மைனா)
ஆலடி, காரைநகர்(கனடா)
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் ஆலடியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடாவை வதிவிடமாகக் கொண்டவருமாகிய திருமதி நல்லையா விஜயலட்சுமி (மைனா) அவர்கள் 07.10.2010 வியாழக்கிழமை இரவு கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சௌந்தரம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற வைரமுத்து நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற வைத்தியநாதன், மலேசியாவைச் சேர்ந்த திருச்சிற்றம்பலம்(சின்னத்துரை),
காலஞ்சென்றவர்களான சண்முகம், தம்பித்துரை (பேரம்பலம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சீதாதேவி, ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலகிருஷ்ணன்(பாபு), அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும், முரளி, கரன், கிரிதரன், கோபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Avenue Eastஇல் அமைந்துள்ள Highland Funeral Home இல் October 9ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00மணி முதல் 9.00மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் ஞாயிறு காலை 8மணி முதல் 10மணி வரை அதே மண்டபத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்:
மகள் சீதாதேவி 905 294 0253

