திருமதி மங்கையர்க்கரசி தில்லைநாதன்
பயிரிக்கூடல், காரைநகர்
(யாழ்ப்பாணம்)
மறைவு: 11.08.2014
காரைநகர், பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், 764. கே.கே.எஸ்.வீதி, தட்டாதெரு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மங்கையர்க்கரசி தில்லைநாதன் 11.08.2014 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், சின்னத்துரை சின்னம்மா தம்பதியரின் மருமகளும், தில்லைநாதன் (ஓய்வுபெற்ற பிரதம முகாமைத்துவ உதவியாளர், நீர்ப்பாசனத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும், கருணாகரன், மோகனன் (குடியேற்ற உத்தியோகத்தர், பிரதேசசெயலகம், கண்டாவளை),
நவனீதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னமுத்து, கந்தசாமி (இளைப்பாறிய வடக்கு கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளரும், தற்போது நுசழஎடைடந பொறியியலாளரும்), நமசிவாயம், பரமேஸ்வரி (சின்னமணி), ஆறுமுகம் (இளைப்பாறிய ஆக்கில ஆசிரிய ஆலோசகர்) ஆகியோரின் பாசமிகு
சகோதரியும், தர்மையா நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், தனலட்சுமியின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற பாலசிங்கம், காலஞ்சென்ற மங்கையர்க்கரசி, பராசக்தி, காலஞ்சென்ற இராமநாதன், கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருமகள் நல்லைநாதன் (லண்டன்), தவராசா குலதேவி (லண்டன்), சிற்சபேஷன் ஜெனனி (லண்டன்), கிருஷ்ணஜெயந்தி ஈஸ்வரன் (ஆஸ்திரேலியா), முரளீஸ்வரன் (லண்டன்), சித்திரா ராஜசிங்கம், சண்முகராசா, சிவரூபி, தவபாலன், நிரஞ்சினி, தனாகரன், குகநந்தினி, லோகானந்தன் ஆகியோரின் மாமியாரும், சிவஞானம் அன்னபாக்கிய லட்சுமி, திருப்பதி லோகேஸ்வரி, ஏரம்பமூர்த்தி புவனேஸ்வரி, ஈஸ்வரலிங்கம் ராஜ லட்சுமி (ஜேர்மனி) ஆகியோரின் சிறிய தாயாரும், சிவானந்தம் மனோரஞ்சிதம், ரவிச்சந்திரன்மலர், காலஞ்சென்ற தேவரஞ்சன் ஆகியோரின்மாமியும், கீர்த்தனா, லேகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தட்டா தெருவிலுள்ள அன்னாரது இல்லத்தில் (14.08.2014) வியாழக்கிழமை மு.ப.9.00 மணிக்கு நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : கணவர், பிள்ளைகள்.

